" ரயிலோட சத்தம் காதவிட்டு போனாக்கூட அதோட அதிர்வுகள் மட்டும் என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு ..."
வாழ்க்கையோட விதைகள்தான் சொந்தங்கள். நாளாக நாளாக அங்க அங்க பரவி தன்னோட ஆதாரங்கள மறந்து தங்களுக்குளே சண்டையிடுற இனம்தான் மானுட இனம்.....
இரவு 12:30 மணி.செல்லுலார் உலகமே தன்ன சுவிட்ச் ஆப் பண்ணியிருந்தது. ஆனா என்னோட அம்மா மட்டும் ஜன்னல் பக்கம் நின்னு அப்பாவுக்குகாக காத்துக்கிட்டுயிருந்தா...
12 மணி ரயில் போயிடுச்சு அவோல காணும்முன்னு அம்மா புலம்பிட்டு இருந்தா..
அப்பா வர்றத அவரோட பூட்ஸ் சத்தத வச்சே தெரிஞ்சுகிடுவா...அவளோட பாதி இரவுகள் ஜன்னலோட தான் கழியும் ..
என்னோட வீட்டு பக்கத்துலதான் முதிரா அக்கா வீடு ..... என்னோட சின்ன உலகத்துல வந்த தேவதை..அவளோட கற்பனைகளின் காதலன் நான்.
அவளோட லைப்ரரி புத்தகங்களோட காதல் தூதுவன் நான்...அந்த புத்தகங்கள படிச்சிட்டு அவ கற்பனை கலந்து சொல்ற கதைகளின் சிநேகிதன் நான் ...
உலகம் எவ்வளவு பெருசுக்கா ... அது நம்மூர் தண்டவாளம் மாதிரி ரொம்ப பெரிசுடா ...
என்னோட எல்லா கேள்விக்கும் முதிரா அக்கா பதிலா இருப்பா ..
அது ஒரு கோடை விடுமுறை நாள். நான் கிரிக்கெட் விளையாட போயிட்டு வீட்டுக்கு வந்தேன் ..முதிரா அக்கா வீட்டுல இருந்து ஒரே அழுக சத்தம்...முதிரா அக்கா நம்மள விட்டுட்டு போயிட்டான்னு அம்மா அழுதுக்கிட்டே சொன்னா...
அன்னைக்கு என்னோட வாழ்க்கையோட நீங்க முடியாத சோகம்மானா முதிரா அக்கா .
என்னோட விசும்பல் இந்த உலகத்துக்கு கேட்டுச்சோ இல்லையோ ஆனா என்னோட முதிரா அக்காவுக்கு கண்டிப்பா கேட்டிருக்கும்
முதிரா அக்காவ பத்தி ஊருக்குள ஒரு சிலபேர் அவள ஒருத்தன் காதலிச்சு ஏமாத்திட்டதாகவும் ஒரு சிலபேரு அவ காதலுக்கு அவங்க அப்பா அம்மா சம்மதிக்காதனாளும்தான் அவ ரயில் விழுந்து இறந்துட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க ...
அந்த இரவு நெடு இரவா இருந்துச்சு..ராத்திரி பன்னண்டு மணி ரயில் போனதுக்கு அப்புறமும் முதிரா அக்கா வீட்டுல இருந்து அழுக சத்தம் கேட்டுகிட்டு இருந்துச்சு..
முதிரா அக்காவ ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல பார்த்ததாகவும் அவா அவங்கள பயமுறுத்துனதாகவும் எல்லோரும் சொன்னாங்க ...அக்காவே பயந்த சுபாவம் அவங்க எப்படி பயமுறுத்துவாங்கன்னு எனக்கு சிரிப்புதான் வந்துச்சு..
அன்னைக்கு டியூஷன் முடிச்சுகிட்டு ரயில் தண்டவாளத்து வழியா வரச்சுல என்னையும் அறியாம கால்கள் வேகமா சைக்கிள் பிடல மிதிக்க ஆரம்பிச்சுது ...
எப்பவுமே முதிரா அக்காவ பாக்கன்னுமின்னு துடிக்கிற என் மனசு அன்னைக்கு மட்டும் ஏன் அவ்வளவு வேகம்மா சைக்கிள்ள மிதிச்சுதுன்னு எனக்கு இன்னமும் தெரியல ..
சந்திரா என்னோட வாடா..அக்கா கூட பேச யாரும்மே இல்லன்னு முதிரா அக்கா கூப்பிட்டா ...கண் விழிச்சு பார்த்தா பன்னண்டு மணி ரயில் போய்ட்டு இருந்துச்சு ..
ரயிலோட சத்தம் காதவிட்டு போனாக்கூட அதோட அதிர்வுகள் மட்டும் என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு ...
ரயில் பயணம்ங்கிறது ஒரு குதுகல பயணம்....
ஆனா என்னோட இப்போதைய ரயில் பயணங்கள் முதிரா அக்காவ நியாபக படுத்தி கலங்கடிகுது..
அம்மா இன்னமும் சொல்லுவா ..உன்னை பெத்தது மட்டும்தாண்ட நானு வழத்ததெல்லாம் முதிரா அக்கான்னு ....
இந்த உலகுள எல்லா உறவுகளும் எதையோ எதிர்பார்க்கும் ..ஆனா முதிரா அக்கா மட்டும் என்னோட அன்ப எதிர்பார்த்துச்சு..
சந்திரன் முதிரா கதைய தொடர் கதையா எழுதுங்க..இல்ல சார் முதிராவோட கதை தொடர் கதையா ஆகக்கூடாது ..