உதிர்த்த இலைகளோ
உண்மையறியா உச்சத்தில்
முதிர்ந்த கிளைகளோ
முதியோர் இல்லத்தில்
சுமையாய் ஆனதோ
சுமந்த பொதிகளுக்கே
கூடற்ற இந்த
கூண்டு குயில்கள்
குஞ்சுகளின்
குத்தல் வெப்பத்தில்
பொசுங்கிய பொதிமூட்டையாய்
உதறிய உறவுகள் எண்ணி
உலர்ந்த வாழ்நாள் எண்ணி
மரணித்த
மானிட உள்ளங்களாய் வாழும்
புனித ஆலயம்
இந்த
புதியதோர் இல்லம்
உன் இதழ்
தொட்டு இடறிய
நீர் துளிகள்
என் மனம்
தொடும்
மழையாய்..
__
உன் பாதம்
தொட்ட நீர் கூட
எ
ன் வாழ்வு
தொடும்
புனித
நீரே
--
நீ நனைவாய்
என்று தெரிந்தே
பொழிகிறது
மழை..
வருணனுக்கும்
உன்னோடு
வாழ ஆசை
__
பிரவாகம்
சுற்றும் பக்தன்
போல்
உனை சுற்றும்
மழைச்சாரல்
__
அம்மனுக்கு
அபிஷேகமென
உனை ஆரத்
தழுவும்
மழை
___
உழைப்பவனின்
வியர்வை
மழையில்
நனையும்
முதலாளி
____
மண்ணில்
வானவில்
மழை தொட்டு
நனைத்த
உன் ஆடையின்
வர்ண சாயம்
___
என் மனம் போல்..
எனை தொட்ட
மழையும்..
உன் பாதம் தொட..
அன்னை தேடி
தவழும்
மழலையாய்
அவனின்
வருகை பதிவேட்டுக்கு
காத்து நிற்கும்
ஆசானாய் அவள்
மாணவனாய் அவன்
உள்ளக் கிடங்கில்
ஒராயிரம்
அலைக்கற்றையாய்
அவன்.நினைவுகள்
அவளுள்ளோ
அலைவரிசை எண்
தெரியாது
அலையும்
மன உணர்வுகள்
அவனுள்ளோ
அலங்காரமும்
அவமதிப்பும்
பெண்ணுக்கே
உவமையானதோ
நெஞ்சுடைத்தவன்
சுவடுகள் தேடி
நொடிகள் பல
காத்து நிற்கும்
வானவில்லோ
சிறை சேர்க்க
காத்து நிற்கும்
மாப்பிள்ளையும்
தன்னை
கரை சேர்க்க
கலன் கொண்டு வராத
காதலனையும்
கடல் கொண்டு போக
காத்திருந்தாளோ
இல்லை
காற்று வாங்க
நின்றிருந்தாளோ
ஆடவன்
அழுதிருந்தாலும்
காணா இக்கவியுழகம்
அழகு மயில்
திரும்பியதாவ்
ஆயிரம் கேள்வி
வைக்கும்
அதில் அவளுக்கு
அக்னி வேள்வி
வைக்கும்
தீக்கிரையானாலும்
தில்லையின் நாயகிக்கு
குற்றமில்லை
சிதைக்கப் பட்டவள்
சீதைதானே
அலங்காரத்திற்கு
அரை நொடிகளபோதும்
அது அமையும்
அவகாசத்திற்கு
அவளுக்கு பல
யுகங்கள் வேண்டும்
முன்னழகு முகம்
பார்த்து
முகம்
சுளித்த
உள்ளங்கள் காணது
பின்னழகு காட்டி
நின்றளோ
இல்லை
அலங்கரிப்பில்
அணிகலன்
குறைவொன்று
கூறிய
குறை மனது
பிடியாது
பின்னல்
சடை காட்டி
நின்றாளோ
இவள் இவர்கள்
விட்டுச் சென்ற
முதிர்கன்னியா
இல்லை
முகம் காட்ட அஞ்சும்
புதிர் கன்னியா
இவள் நின்றதென்னவோ
இறைவன் வரம் தேடி அல்ல
இருமண வரன்
வேண்டி
வினாக்கள் பல
இருந்தும்
விடை என்றும்
அவள் வசமே