அவனின்
வருகை பதிவேட்டுக்கு
காத்து நிற்கும்
ஆசானாய் அவள்
மாணவனாய் அவன்
உள்ளக் கிடங்கில்
ஒராயிரம்
அலைக்கற்றையாய்
அவன்.நினைவுகள்
அவளுள்ளோ
அலைவரிசை எண்
தெரியாது
அலையும்
மன உணர்வுகள்
அவனுள்ளோ
அலங்காரமும்
அவமதிப்பும்
பெண்ணுக்கே
உவமையானதோ
நெஞ்சுடைத்தவன்
சுவடுகள் தேடி
நொடிகள் பல
காத்து நிற்கும்
வானவில்லோ
சிறை சேர்க்க
காத்து நிற்கும்
மாப்பிள்ளையும்
தன்னை
கரை சேர்க்க
கலன் கொண்டு வராத
காதலனையும்
கடல் கொண்டு போக
காத்திருந்தாளோ
இல்லை
காற்று வாங்க
நின்றிருந்தாளோ
ஆடவன்
அழுதிருந்தாலும்
காணா இக்கவியுழகம்
அழகு மயில்
திரும்பியதாவ்
ஆயிரம் கேள்வி
வைக்கும்
அதில் அவளுக்கு
அக்னி வேள்வி
வைக்கும்
தீக்கிரையானாலும்
தில்லையின் நாயகிக்கு
குற்றமில்லை
சிதைக்கப் பட்டவள்
சீதைதானே
No comments:
Post a Comment