இதழ்கள் பேசும்
காதல்
இதயம் தொடுவதில்லை
இதயம் தொடும்
காதல்
இயல்பில் இணைவதில்லை
காதல் தோற்பதில்லை
காதல் நினைவுகளும்
தோற்கடிக்கப் படுவதில்லை
தோற்கடித்தேன்
என
ஜம்பம் பேசியவர்கள்
தோற்றுப்போனார்கள்
காதல்
எளிதில் துவழ்வதில்லை
எழுபதிலும்
துள்ளி எழும்
காதல்
தூவிய விதை அல்ல
தூர் பரவிய
மரம்
காதல் மரணித்தறியாதது
காதல் மனங்கள் பிறர்
கவனித்தறியாதது
முதலுமல்ல
முடிவுமல்ல
முற்றுப்பெறா
காவியம் இந்த
கவிதை
No comments:
Post a Comment