இமை மூடிய இரவுகளில்
மனம் உறங்கா நாட்களில்
தடம் புரளா உன்
நினைவுகளில்
உதிர்ந்ததென்னவோ
என் உயிர் மட்டும்தான்...
மீள முடியா உன்
நினைவுகளுடன்
மீண்டும்
ஜனனிக்கிறேன்
உன் காதல் தேசத்தில்
உயிர் வாழ...
உதிரங்களின் நிறம்
ஒன்றாக இருப்பினும்
உயிர் கொண்ட
இருவரின் உள்ளம்
கொள்ளும் நினைவுகள்
ஏன் வெவ்வேறாக..
உன் உள்ளம் தேடி
ஓடி வரும்
உமை நெஞ்சின்
உயிரோவியம்
என்றும் என் நீ
No comments:
Post a Comment