Tuesday, August 31, 2021

முதியோர் இல்லம்

உதிர்த்த இலைகளோ

உண்மையறியா உச்சத்தில்

முதிர்ந்த கிளைகளோ

முதியோர் இல்லத்தில்

சுமையாய் ஆனதோ

சுமந்த பொதிகளுக்கே

கூடற்ற இந்த

கூண்டு குயில்கள்

குஞ்சுகளின்

குத்தல் வெப்பத்தில்

பொசுங்கிய பொதிமூட்டையாய்

உதறிய உறவுகள் எண்ணி

உலர்ந்த வாழ்நாள் எண்ணி

மரணித்த

மானிட உள்ளங்களாய் வாழும்

புனித ஆலயம்

இந்த

புதியதோர் இல்லம்

No comments: