Tuesday, August 31, 2021

இயற்கை ஆகிய நான்

விடியும் பொழுது

மலரும் பூக்கள்

கூவும் குயில்கள்

ஆடும் மயில்கள்

உதிக்கும் சூரியன்

உருகும் பனி

ஒளிரும் நிலவு

எதிலும் மாற்றமில்லை


ஆயிரமாயிரம் மரங்களை

மாய்த்த பின்னும்

கடைசி மரத்தின்

நல்லியல்பில் மாற்றமில்லை


ஆயிர்மாயிரம் ஏரிகளை

ஆக்கிரமித்த பின்னும்

கடைசி ஏரியின்

ஈகையில் மாற்றமில்லை


ஓசோனை துனைத்த

பின்னும்

தூறும் மழையின்

மகிமையில் மாற்றமில்லை


ஆறறிவு அதிகாரம் பேசி

ஆயிரமாயிரம் சதுர அடிகளை

அளக்க நினைத்த மானுடமோ

இன்று

ஆறடி நிலத்துக்கு பயந்து


கண் கண்ட நிலத்தினை

ஆள நினைத்த மனிதமோ

கண்ணுக்குத் தெரியா

கிருமியின் ஆட்சியில்


வந்து மறையும் உனக்கே

இவ்வலகென்றால்

அனைத்து உயிருக்கும்

வாழ்வளித்த

இயற்கை எனும்

எனக்கு


உலகப் பேரவையில்

இயற்கை ஆகிய நான்

No comments: