விடியும் பொழுது
மலரும் பூக்கள்
கூவும் குயில்கள்
ஆடும் மயில்கள்
உதிக்கும் சூரியன்
உருகும் பனி
ஒளிரும் நிலவு
எதிலும் மாற்றமில்லை
ஆயிரமாயிரம் மரங்களை
மாய்த்த பின்னும்
கடைசி மரத்தின்
நல்லியல்பில் மாற்றமில்லை
ஆயிர்மாயிரம் ஏரிகளை
ஆக்கிரமித்த பின்னும்
கடைசி ஏரியின்
ஈகையில் மாற்றமில்லை
ஓசோனை துனைத்த
பின்னும்
தூறும் மழையின்
மகிமையில் மாற்றமில்லை
ஆறறிவு அதிகாரம் பேசி
ஆயிரமாயிரம் சதுர அடிகளை
அளக்க நினைத்த மானுடமோ
இன்று
ஆறடி நிலத்துக்கு பயந்து
கண் கண்ட நிலத்தினை
ஆள நினைத்த மனிதமோ
கண்ணுக்குத் தெரியா
கிருமியின் ஆட்சியில்
வந்து மறையும் உனக்கே
இவ்வலகென்றால்
அனைத்து உயிருக்கும்
வாழ்வளித்த
இயற்கை எனும்
எனக்கு
உலகப் பேரவையில்
இயற்கை ஆகிய நான்
No comments:
Post a Comment