Tuesday, August 31, 2021

முதிர்ந்தவள்

தட்டிப் பறித்து

தனித்து விடும்

உறவை விட

தாங்கி பிடிக்கும்

ஊன்றுகோலே

 தாய்க்கு தலைப்பிள்ளை

___

கட்டியவனுக்கு தன்

உடல் கொடுத்து

உரிமை கொடுத்து


பெற்றதற்கு தன்

உயிர் கொடுத்து

உறவு கொடுத்து


உடைந்த எலும்புகளுக்கு

ஒட்டிய தோள் கொடுத்து


வலிகளின் அனுபவங்களை

வரிகளாய் ஏந்தி


விழும் வயதிலும்


உறவாடிய பிள்ளைகள்

உதறிய பின்னும்


விலகி நின்ற

 உறவுகளுக்கு

இன்னும் தன்

நெஞ்சம் கொடுத்து

வாழும்


பல் போன பொக்கை

வாய்க் கிழவி

இந்த தாய் மரம்..

No comments: