தட்டிப் பறித்து
தனித்து விடும்
உறவை விட
தாங்கி பிடிக்கும்
ஊன்றுகோலே
தாய்க்கு தலைப்பிள்ளை
___
கட்டியவனுக்கு தன்
உடல் கொடுத்து
உரிமை கொடுத்து
பெற்றதற்கு தன்
உயிர் கொடுத்து
உறவு கொடுத்து
உடைந்த எலும்புகளுக்கு
ஒட்டிய தோள் கொடுத்து
வலிகளின் அனுபவங்களை
வரிகளாய் ஏந்தி
விழும் வயதிலும்
உறவாடிய பிள்ளைகள்
உதறிய பின்னும்
விலகி நின்ற
உறவுகளுக்கு
இன்னும் தன்
நெஞ்சம் கொடுத்து
வாழும்
பல் போன பொக்கை
வாய்க் கிழவி
இந்த தாய் மரம்..
No comments:
Post a Comment