Tuesday, August 31, 2021

காதல்3

உன் இதழ்

தொட்டு இடறிய

நீர் துளிகள்

என் மனம்

தொடும்

மழையாய்..

__

உன் பாதம்

தொட்ட நீர் கூட எ

ன் வாழ்வு

தொடும்

 புனித நீரே

--

நீ நனைவாய்

என்று தெரிந்தே

பொழிகிறது

மழை..

வருணனுக்கும்

உன்னோடு

வாழ ஆசை

__

பிரவாகம்

சுற்றும் பக்தன்

போல்

உனை சுற்றும்

மழைச்சாரல்

__

அம்மனுக்கு

அபிஷேகமென

உனை ஆரத்

தழுவும் மழை

___

உழைப்பவனின்

வியர்வை

 மழையில்

நனையும்

முதலாளி

____

மண்ணில்

வானவில்

மழை தொட்டு

நனைத்த

உன் ஆடையின்

வர்ண சாயம்

___

என் மனம் போல்..

எனை தொட்ட

மழையும்..

உன் பாதம் தொட..

அன்னை தேடி தவழும்

மழலையாய்

No comments: