உன் இதழ்
தொட்டு இடறிய
நீர் துளிகள்
என் மனம்
தொடும்
மழையாய்..
__
உன் பாதம்
தொட்ட நீர் கூட எ
ன் வாழ்வு
தொடும்
புனித நீரே
--
நீ நனைவாய்
என்று தெரிந்தே
பொழிகிறது
மழை..
வருணனுக்கும்
உன்னோடு
வாழ ஆசை
__
பிரவாகம்
சுற்றும் பக்தன்
போல்
உனை சுற்றும்
மழைச்சாரல்
__
அம்மனுக்கு
அபிஷேகமென
உனை ஆரத்
தழுவும் மழை
___
உழைப்பவனின்
வியர்வை
மழையில்
நனையும்
முதலாளி
____
மண்ணில்
வானவில்
மழை தொட்டு
நனைத்த
உன் ஆடையின்
வர்ண சாயம்
___
என் மனம் போல்..
எனை தொட்ட
மழையும்..
உன் பாதம் தொட..
அன்னை தேடி தவழும்
மழலையாய்
No comments:
Post a Comment