ஆயிரமாயிரம் மாண்டோம்
ஆறிடினும் புண்பட்டோம்
ஆதவனையே சுட்டெறித்தோம்
அயராது பெற்ற
விடுதலைக்காய்
விலை போன
களை களைந்தோம்...
தலைகள் பல களைந்தோம்
தரணியின் தடையறுக்க...
எங்களின் உள்ளமட்டுமல்ல
உடை கூட
எங்களின் தேசியம்
பேசும்
உதைபட்டோம்
புதைபட்டோம்
புத்துயிர் நீத்தோம்
சுவாசமென
கொண்ட
சுதந்திரத்திற்காய்
துரோகத்தின்
நிழல் கண்டு
துயருற்றோம்
துடித்திட்டோம்
துணிந்திட்டோம்
தூவானம் எங்களின்
கரம் நனைக்க
மதமில்லை
மனித சாதி தவிர
வேறெதுவுமில்லை
வெறி கொண்ட
எங்களின்
சுதந்திர வேட்கையில்
இன்றோ
உயிர் விட்ட எங்களின்
உள்ளங்கள்
உடைந்து நிற்கும்
உங்களின் கோழை நிலை
கண்டு...
வீழ்ந்திட்ட எங்களின்
நெஞ்சங்கள்
மீண்டும்
சீழ் பட்டு மாயும்
இந்த கொள்ளையரின்
ஆட்சி கண்டு
எங்களின் வாலாபாக்
சாம்பல்
சுவடுகள் அணையாது
எரியட்டும்
எரிதழல் உங்கள்
உள்ளத்தில்
போதும் இந்த
சுதந்திரம்..
புகுந்திடுவோம்
மற்றுமோர்
ஆங்கிலச் சிறையில்
No comments:
Post a Comment