நம்மின் முப்பாட்டான்..
நாம் படைத்த முந்நூறு கோடி
தெய்வங்களில் இவனும் ஒருவன்..
விலங்கினை தெய்வமாக்கி
கோவில் எழுப்பிய
மனித மாண்புகள்
சக மனிதனை கோவில் நுழைய
தடை விதித்த
மானுட விநோதம்..
கரை விட்டு கரை தாவும் (கட்சி அரசியல் வேஷ்டி)
யுக்தி கற்றுத் தந்த
மரபியல் சான்று..
மார்படித்து
நீ செய்த சத்தியங்கள்
நாளைய அதிகாரத்தின்
அச்சுப் பெறா வாக்குறுதிகள்..
வான் பார்த்து வணங்கும்
ஜந்தறிவு விலங்குக்கும்
இறைவன் பேர் சொல்லி
ஓட்டுரிமை கொடுத்து
அரசியலாக்கும்
புகைப்படமோ என
பதைபதைக்கும்
ஓர் பாமர இதயம்..
ஆன்மீக அரசியலை
பாவிக்கு மட்டுமின்றி
ஆவிக்கும்
அணிந்து விடுமோ
இந்த காவி...
No comments:
Post a Comment