Tuesday, August 31, 2021
உயிர்
காட்டு நீர்
கானல் நீர் என்றானபின்..
எங்களின்
இருப்பிடம்
உங்களின்
போதை என்றானபின்..
எங்களின்
வாழ்வாதாரம்
உங்களின்
விற்பனை என்றானபின்..
உங்களின்
இருப்பிடம் வந்து
எங்களின் இருப்பிற்காய்
கையேந்தினோம்
நாவின் தாகத்திற்காய்..
வளங்களை
வாக்குறுதிகள்
கூறுகள் போட்ட பின்னும்
எட்டி நின்றும் காண முடியா
எட்டாவது தலைமுறைக்கு
சேர்த்த பின்னும்
சுற்றி காணும் உயிர்கள்
அனைத்தையும்
சுடுகாட்டில் புதைத்த பின்னும்
நில நீர் விற்பனையில்
நீ தீர்மானித்த மை..
ஆறறிவு பேசி
இயற்கையை
களவாடிய
மாண்புமிகுக்களே..
ஐந்தறிவு போதும்
அடுத்த தலைமுறைக்கு
மிச்சம் வைக்க...
எங்களின்
எச்சம்
நிரப்பிய
காடுகள்
உங்களின்
லட்சங்களுக்காய்
கான்கீரிட் காடுகளாய்
வளங்கள்
வாதிகளுக்கு
மட்டுமல்ல
எங்களின்
வாழ்க்கைக்கும்தான்..
ஒரறிவு முதல்
ஆறறிவு வரை
எங்களுக்கு
மேய்ப்பர்கள்
தேவையில்லை
மீட்பர்கள்
வேண்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment