Tuesday, August 31, 2021

இயற்கை

பலங் கொண்ட

காற்று

தலையில்

மண் தூற்றியபோது

வராத கோபம்

ஏன் வந்தது நான் தூற்றியபோது

என் நண்பனுக்கு


அரக்கத்தனம் கொண்ட

ஆழிப் பேரலை

வீட்டை

நொறுக்கியபோது

வராத கோபம்

என் பந்து பட்டு

ஜன்னல் உடைந்தபோது

ஏன் வந்தது

என் அண்டை வீட்டானுக்கு


அர்த்த ராத்திரியில்

வீசும்

நிலவொளி

மீது வராத கோபம்

நான் ஏற்றிய

விளக்கினால்

ஏன் வந்தது

என் துணைக்கு


இடி சத்தத்திற்கு

வராத கோபம்

என்

இடிச் சிரிப்பிற்கு

ஏன் வந்தது

என் தந்தைக்கு


மரக்கிளை

முறிந்து

மண்டை உடைந்தபோது

வராத கோபம்

ஏன் வந்தது

ஆசிரியர் பிரம்பால்

அடித்தபோது

எனக்கு


இயற்கையின்

மீது

கோபமில்லையென்றால்

நாமும்

இயற்கைதானே..


என் ஜனமும்

மரணமும்

இயற்கைதானே..


கோபம் கொள்ளாதீர்

மனித இயற்கை மீது

No comments: