அலங்காரத்திற்கு
அரை நொடிகளபோதும்
அது அமையும்
அவகாசத்திற்கு
அவளுக்கு பல
யுகங்கள் வேண்டும்
முன்னழகு முகம்
பார்த்து
முகம் சுளித்த
உள்ளங்கள் காணது
பின்னழகு காட்டி
நின்றளோ
இல்லை
அலங்கரிப்பில்
அணிகலன்
குறைவொன்று கூறிய
குறை மனது
பிடியாது
பின்னல் சடை காட்டி
நின்றாளோ
இவள் இவர்கள்
விட்டுச் சென்ற
முதிர்கன்னியா
இல்லை
முகம் காட்ட அஞ்சும்
புதிர் கன்னியா
இவள் நின்றதென்னவோ
இறைவன் வரம் தேடி அல்ல
இருமண வரன்
வேண்டி
வினாக்கள் பல இருந்தும்
விடை என்றும்
அவள் வசமே
No comments:
Post a Comment