எடுத்த
தேனீக்கு வலியாது
தேன் திருடுவதில்லை
இவ்வறிவு
வாழ நிலம்
தரும் இயற்கையை
ஆள வழி தேடும்
இவ்வறிவு
கொடுத்தே
பழகிய
இயற்கையை
எடுத்தே பழகி
இன்று
அழித்தே வாழும்
இவ்வறிவு
தன்னின்
சுய லாபத்திற்காய்
தன் தலைமுறையின்
வாழ்வியலையும்
அழிக்கும்
இவ்வறிவு
இயற்கையாய்
பெற்ற அனைத்துக்கும்
விலை வைக்கும்
இவ்வறிவு
பறிப்பதும்
எடுப்பதும்
இயற்கையிடம் மட்டுமல்ல
தம் சக வாழ்
ஆறறிவிடமும் தான்
வெட்டி எறிந்த
வாழை கூட
வளர்ந்து வளம் கொடுக்கும்
இவ்வறிவின்
வாழ்விற்காய்
பூக்கும் பூவும்
காய்க்கும் காயும்
கனியும் கனியும்
தனக்கென்று கொள்ளாத
இம் மரங்களுக்கு
பறிப்பவர் கைகளும் தெரிவதில்லை
ருசிப்பவர் முகங்களும் அறிவதில்லை
ஒளி தரும் நிலவும்
மழைத்துளி தரும் வானும்
உயிர் தரும் காற்றும்
நல்உணவு தரும் காடும்
விலை கேட்பதில்லை
கற்றுத் தருவதும்
கற்றுத் தெளிவதும்
இவ்வறிவல்ல
இவ்வறிவை
கட்டிக்காக்கும்
இயற்கையே
No comments:
Post a Comment