பார் போற்றும்
பகவானுக்கும்
பகைவர் உண்டாம்
இத்தரணியில்
இறைவன் இல்லையென
துதிபாட
நாளுக்கோர் அலங்காரமாம்
நாலடிக்கோர் கோவிலாம்
வினை அவனை
வியாபாரமாக்கிட
பிழை செய்து வாழ்வோர்க்கு
பிரச்சார மேடைகள்
தேவை
பிரம்மன் அவன்
புகழ் பாட
விவேகம் கொண்ட மனிதர்க்கு
விதி கொண்டு விளையாட
வீதி வந்தான் விதி தேவன்
வீணாய்ப் போன மனிதனாய்
தரணி வந்த இறையும்
தான் யார் என்று அறியாது
இப் பாரினில்
மன மாறிப்போனான்
தரம்கெட்ட மனிதளாய்
No comments:
Post a Comment