Tuesday, August 31, 2021

கடவுள்

பார் போற்றும்

பகவானுக்கும்

பகைவர் உண்டாம்

இத்தரணியில்

இறைவன் இல்லையென

துதிபாட


நாளுக்கோர் அலங்காரமாம்

நாலடிக்கோர் கோவிலாம்

வினை அவனை

வியாபாரமாக்கிட


பிழை செய்து வாழ்வோர்க்கு

பிரச்சார மேடைகள்

தேவை

பிரம்மன் அவன்

 புகழ் பாட


விவேகம் கொண்ட மனிதர்க்கு

விதி கொண்டு விளையாட

வீதி வந்தான் விதி தேவன்

வீணாய்ப் போன மனிதனாய்


தரணி வந்த இறையும்

தான் யார் என்று அறியாது

இப் பாரினில்

மன மாறிப்போனான்

தரம்கெட்ட மனிதளாய்

No comments: