கரம் தள்ளும்
சுற்றம்
கரத்தின் வியர்வையில்
உயிர் வாழும்
சக மானுடத்
தீண்டத்தகாதம் பேசி
அதன் வாழ்வு
மீளத்தகாததாக்கும்
காலணியாகும்
ஆவினை
மானுடம் உண்ணத்
தடை கொடுக்கும்
என் தமக்கை
வெளுக்கும் துணி
என் தாய்
கழுவும் பாத்திரம்
என் தகப்பன்
செய்யும் விவசாயம்
தீண்டத்தகாவதில்லை
எங்களின் சுவாசம்
நிறைந்த காற்று
தீண்டத்தகாவதில்லை
எங்களின் காலடி
பட்ட பூமி
தீண்டத்தகாவத்தில்லை
எங்களின் குடிசையில்
வழிந்து கடல்
கலக்கும் மழைநீர்
தீண்டத்தகாவதில்லை
உங்களின் விலக்கீடுகளே
எங்களின் ஒதுக்கீடுகள்
என்றோ ஒர்நாள்
தாழ்ந்து நின்று
தானம் கேட்ட
எங்களின் கரங்கள்
எழுந்து நின்று
வானம் தொடுகைரயில்
தொட்டு அணைக்கா
உங்களின் கரங்கள்
எங்களின் வரலாற்றுக்கு
தூணாகலாம்
வேற்றுமை பேசம்
உங்களின் மனங்கள்
எங்கள் வெற்றியின்
வேர் தேடலாம்
சாதியம் பேசியது போதும்
வா
தமிழ் வாழியம் பாடலாம்
No comments:
Post a Comment