நாம் இருவரும்
பேசும்
மொழி அல்ல...
அது நாம்
வாழும் வழி..
கண்டிராத
கதைத்திராத
முன்பின்
முகவரி தெரியாத...
பழகி அறியாத..
அவனும்
அவளும்
அன்பின் ஆவணமாய்..
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
உயிர் பிரியும்
உன்னதத்துவம்
இது
இலக்கியக் காதல்
அல்ல
இலக்குகள் அற்ற
இல்லற
இனிமைத்துவம்..
தித்திக்கும்
என்று
சுவைப்பதில்லை
தீர்த்தம்
என்றும்
பருகுவதில்லை
அவள் அவன் என
அவன் அவள் என
வாழும் வாழ்வை..
காதலின்
உவமையாக
ஒன்றிரண்டல்ல
ஒராயிரம்
உயிர்கள்
இத்துடன் அல்ல
இன்னமும்..
No comments:
Post a Comment