மையிட்ட மான் விழி அவளை
மையல்லிட ஆண் விழி நோக்கும்
நோக்கும் கூர் விழி பார்வையிலே
பாவை மனம் பதறிடுமே
அஞ்சிடும் அவள் விழி கண்ட
ஆண் கரமதுவே
கோதிடும் கோதையவள்
பூங்குழலை அக்கணமே
அசைந்திடும் பூங்குழல்
ஆடவன் கைதனிலே
இசைந்திட மபங்குது
மங்கை மானுட(ல்) தேகமே
பூவொத்த செந்நிற மேனிதனில்
வாள் பிடித்தவன் கைகள்
ஒய்யார வளைவுதனில்
வழி தேடி வசந்தம் காணுமே
வழி நாடி வந்த கரமதனை
பழி சொல்ல வந்த பாவையிதழ்
கோமகன் வாய்தனிலே
தித்திக்கும் பலாச் சுளையாய்
No comments:
Post a Comment