Thursday, April 7, 2011

தென்றல்

அவன் அவள்
பயணங்களில்
மூன்றாவதாக
காற்றும் பயணிக்க ...


அவர்களோட பயணம்
என்றாவது
முடிவடையும்
ஆனால் கற்றோட
பயணம்
அவர்களோட வரலாற சுமந்துகிட்டு
பயணிக்கும்....

கனவுகளோடு பயணிக்காத
மானுடம் கூட
காற்றோட பயணிக்கணும்...


குயில்களோட கூவல்
குழல்களோட நாதம்
குழந்தையின் அழுகை
அலைகளின் எழுச்சி
அருவியின் ஓசை
மானிட ஓலம்
மலரின் வாசம்
ஏழையின் கண்ணீர்
எயிப்பவர் கோபம்
சந்தோசம்
துக்கம் எல்லாத்தையும்
சுமந்துகிட்டு
மெளனமாக
பயணிக்கிற காற்று....


புல்லாங்குழலோட
துவாரம் நுழைந்து
நாதம் இசைக்கும்
காற்று
மனித புல்லாங்குழல்
நாசியில் நுழைந்து
உயிர் நாதம்
இசைக்கும்...........

மானுடத்துக்கும்
காற்றுக்கும்
உள்ள நெருக்கம்
மனிதனுக்கும்
அவனுடைய தாயின்
கருவறைக்கும்
உள்ள நெருக்கம் ......

காதலனோட
மூச்சு காற்று கூடே
காதலிக்கு
தூதாய்....


மறைந்து போன
காதலியோட
நினைவுகள சுமந்துகிட்டு
அவளோட மூச்சு காற்று கலந்த
இந்த உலகத்துல
அதை சுவாச்சுகிட்டு
வாழுற வாழ்க்கை
சொர்க்கத்த விட மேல் ...........



ஏழை
பணக்காரன்
நாடு
நாமுன்னு
எந்த வேறுபாடும்
இல்லாம பயணப்படும்
காற்று....

No comments: