Wednesday, September 10, 2008

காதல் வான எல்லையில்


உன் வான எல்லைக்குள்
இடறிய என் இதயம்
அழுகிறதோ மழையாய்
மின்னலாய்
தோன்றி
மறையும்
உன் வருகையால்

வானவில்லாய்
நீ அணியும் புடவை
காண கிடைக்கும் அரிதாய்

கலக்கலாம் என்கிறதோ
என் மனம்
கலைகிறாய் மேகமாய்

துடிக்கிறதோ என் இதயம்
நெஞ்சாங்கூட்டில் இடியாய்

No comments: