உதிர்த்த இலைகளோ
உண்மையறியா உச்சத்தில்
முதிர்ந்த கிளைகளோ
முதியோர் இல்லத்தில்
சுமையாய் ஆனதோ
சுமந்த பொதிகளுக்கே
கூடற்ற இந்த
கூண்டு குயில்கள்
குஞ்சுகளின்
குத்தல் வெப்பத்தில்
பொசுங்கிய பொதிமூட்டையாய்
உதறிய உறவுகள் எண்ணி
உலர்ந்த வாழ்நாள் எண்ணி
மரணித்த
மனித உள்ளங்களாய் வாழும்
புனித ஆலயம்
இந்த
புதியதோர் இல்லம்
No comments:
Post a Comment