கந்தலாடையும்
காவியங்கியும்
இந் நாட்டின்
தேசிய சின்னமாய்
அநாதைகளும்
அவலைகளும்
இந் நாட்டின்
சாபக் கேடாய்
வறுமையும்
பட்டினியும்
இந் நாட்டின்
தேசிய கொடியாய்
ஊழல் வாதியும்
ஊரை ஏமாற்றுபவனும்
இந் நாட்டின்
தேசிய தலைவராய்
மத வெறியும்
மனித வெடியும்
இந் நாட்டின்
முதுகெலும்பாய்
இருப்பினும்
அன்பும்
கண்ணியமும்
கலாச்சாரமும்
இந் நாட்டின்
நாணயத்தின் இருபக்கங்களாய்
No comments:
Post a Comment